![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/6-11.jpg?resize=708%2C354&ssl=1)
நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் லிபியாவை ஆண்ட சர்வாதிகாரி கர்னல் முவம்மர் கடாபி அவர்களின் மகனின் வேட்பு மனு தேர்தல் ஆணையகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
லிபியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மறைந்த சர்வாதிகாரி கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாம் கடாபி போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.