![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-18-at-22.33.39.jpeg?resize=708%2C531&ssl=1)
தென்மராட்சி ரீதியாக நடந்த பிறிமியர் லீக் NNTPL சுற்று போட்டிகளின் தெரிவின் இறுதிப் போட்டி இன்று ஞாயிறு கள்வியங்காடு ஜி. பி. எஸ் மைதானத்தில் மதியம் 1.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் மட்டுவில் சுப்பர் கில்லீஸ் மற்றும் சாவகச்சேரி கிறிக்கர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.தென்மராடசி பகுதியில் உள்ள மைதானங்களில் வெள்ளம் நிற்பதால் இப் போட்டி கல்வியங்காடு ஜி பி . எஸ் மைதானத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது
கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரையும் பங்குபற்றி சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சாவகச்சேரி அணியை ஜி. பிரசன்னாவும் – மட்டுவில் அணியை ந. நித்திய சீலனும்
ஏலத்திற்கு ஒப்பந்தம் செய்து அணிகளின் உரிமையாளர்களாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-18-at-22.34.05.jpeg?resize=708%2C531&ssl=1)