இலங்கைசெய்திகள்

வீதியில் வைத்து உந்துருளி முற்றாக தீக்கிரை!!

The motorcycle burned

கண்டி – யாழ்ப்பாணம் ஏ 9 வீதி ஊடாக நேற்றிரவு மாத்தளை நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று நாவுல, அரங்கல பிரதேசத்தில் வைத்து முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

குறித்த உந்துருளி புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட நிலையில், அதனை கொண்டு செல்லும் வழியில் இந்த விபத்து நேர்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 உந்துருளியில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அருகிலிருந்த வர்த்தக நிலையமொன்றுக்கு சிறிதளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

எனினும் உந்துருளியை செலுத்திச் சென்ற நபருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லையென விசாரணைகளை முன்னெடுத்துவரும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button