இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தில் இருந்து விலக எந்த தீர்மானமும் இல்லை – தயாசிறி ஜயசேகர!!

thayasri jayasekara

அரசாங்கத்தில் இருந்து விலகி செயற்படுவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

குருணாகல் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த கட்சியின் பொதுச் செயலாளர் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தொடர்பில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை அவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும்
கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்

எனவே தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button