இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலகுவான ஆடையில் பாடசாலைக்கு வந்த ஆசிரியர்கள்!!

teachers

ஆசிரியர்கள் புடவைக்குப் பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து இன்று (21) பாடசாலைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்டுகின்றது.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புடவை அணிவதற்கு அதிக செலவாவதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளில் வேறு உடை அணிந்து ஆசிரியர்கள் வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், எந்தவொரு ஆசிரியர் சங்கத்தினதும் அழுத்தத்தினால் ஆசிரியர்கள் குறித்த தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் பொது நிர்வாகம் தொடர்பான 5/2022 சுற்றறிக்கையின் பிரகாரம் ஆசிரியர்களின் ஆடை உரிமைக்கு அமைவாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆசிரியர்களின் உடையான புடவையை மாற்றுவது தொடர்பில் தாம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கபோவதில்லையென கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அண்மையில் நாடாளுமன்ற தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button