இலங்கைசெய்திகள்

போராட்டக் களம் சென்று பேராதரவு வழங்குங்கள்!!

Sumanthiran

வடக்கு, கிழக்கு இளைஞர்களிடம்
சுமந்திரன் பகிரங்க வேண்டுகோள்

(நமது விசேட செய்தியாளர்)

“அரசிலிருந்து அனைத்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களையும் பதவி விலகக் கோரி கொழும்பு – காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கிலிருந்தும் இளைஞர்கள் சென்று முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்.”

  • இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போராட்டக் களத்துக்கு அரசியல் கட்சிகள் வர வேண்டாம் என்று இளைஞர்கள் கூறியுள்ளனர். ஆகவே, வடக்கு, கிழக்கிருந்து இளைஞர்கள் அங்கு சென்று முழுமையான ஆதரவு வழங்க வேண்டும். எமது நிலைப்பாட்டை அங்கே தெரிவிக்க வேண்டும்” – என்றார்

Related Articles

Leave a Reply

Back to top button