![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/03/23-64008a79ac51b.jpeg?resize=600%2C400&ssl=1)
பாடசாலையை இடைநிறுத்திய அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தகுதியுடைய தொழில் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்வதற்குப் பெற்றோர் வழிகாட்டவேண்டும் எனவும் முதலில் தொழிற்கல்வியில பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற மாற்றங்கள் பெற்றோரிடம் வரவேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.