![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/04/23-644a3f92f1c87.jpeg?resize=600%2C400&ssl=1)
வீதியில் கண்டெடுத்த ஒரு இலட்சம் ரூபா பணப்பொதியினை உரியவர்களிடம் ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் – சிறிமாபுர மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்விகற்கும் குறித்த சிறுமி, அருகிலுள்ள தனது நண்பியின் வீட்டில் விளையாடிவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது வீதியோராமாக கிடந்த கைப்பை ஒன்றைக் கண்டெடுத்துள்ளார்.
கனமான பையாக இருக்கவே அதனைத் திறந்து பார்த்த சிறுமி, பணக்கட்டு இருப்பதைப் பார்த்து நண்பியின் தாயாரின் உதவியுடன் அதனை உரியவரிடம் கொடுத்துள்ளார்.
சிறுமியின் நேர்மையான செயலைப் பாராட்டி, அப்பகுதியிலுள்ள நலன்புரிச் சங்கமொன்று சிறுமியை கெளரவித்திருந்ததாகவும் கூறப்படுவதுடன், பணத்தை தொலைத்தவரிடம் அதனை மீள ஒப்படத்த சிறுமிக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.