இலங்கைசெய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!!

Struggle

வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய பகுதிகளில் இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அலுவலகம் முன்பாகவும்
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர

“எங்கே எங்கே உறவுகள் எங்கே”, “நிதி வேண்டாம் நீதியே வேண்டும்”, “பாடசாலை சென்ற மாணவர்கள் எங்கே”, “அரசின் பொறுப்பற்ற பதில்களைக் கண்டிக்கின்றோம்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்ததுடன், எமது உயிர் உள்ளவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டு இருப்போம்” என்றும் கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button