![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/02/23-63fbcb7fe6b22.jpeg?resize=600%2C400&ssl=1)
கொஹுவலை சந்தியில் மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெறுவதால் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரை அதன் நிர்மாணப்பணிகள் இடம் பெறவுள்ளமையினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பயணிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.