இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மீண்டும் வந்தது நீல இரத்தினக்கல்!!

Srilanka

 அண்மையில்  இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்ட  உலகின் மிகப் பெரிய நீல இரத்தினக் கல் விற்பனை செய்யப்படாமல் திரும்ப  மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு இரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள இந்த இரத்தினகல் சுவிட்சர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் அதன் அங்கீகாரத்தைப் பெற்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஆனால் துரதிஷ்டவசமாக இந்த இரத்தின கல்லை எடுத்துச் சென்ற குழுவினரால் அதனை விற்க முடியாமல் போனதால் கடந்த வாரம் மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

ஒரு நல்ல ஒப்பந்தம் கிடைத்தவுடன் அதனை விற்போம் என்று அக் குழு தெரிவித்துள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button