இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சைனாபாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கான விசேட அறிவிப்பு !

முழுமையாக சைனாபாம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்கள் 06 மாதங்கள் கடப்பதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது கட்டாயம் என நிபுணர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சைனாபாம் தடுப்பூசியின் வீரியம் 03 மாதங்களுக்கு பின்னர் குறைவடைதாக தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை விஷேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் விஷேட வைத்தியர் ரஜீவ் த சில்வத தெரிவித்துள்ளார்.

20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 06 மாதங்களின் பின்னர் மூன்றாவது டோஸ் செலுத்துவது சிறந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button