உலகம்செய்திகள்

மண் வளத்தை வலியுறுத்தி 27 நாடுகளுக்கு 100 நாட்கள் ஈருருளிப்பயணம் செல்லும் ஈஷா ஜக்கி வாசுதேவ்!!

Soil resource conservation

உலகளவில் மண் வளப்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவை ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், 100 நாள்களில் 27 நாடுகளுக்கு 30 ஆயிரம் கி.மீ ஈருருளிப் பயணம் செய்ய உள்ளார்.

மார்ச் 21-ம் திகதி லண்டனில் இருந்து தனது விழிப்புணர்வுப் பயணத்தைத் தொடங்கும் அவர், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியா சென்று தமிழ்நாட்டில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.

மண் வளப் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தவே இந்தப் பயணம் எனத்தெரிவித்த அவர்,உலக அளவில் பிரபலமான இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பல தரப்பினரும் இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தில் பங்கெடுக்க உள்ளனர். இந்தப் பயணத்தில் பல சவால்கள் இருக்கின்றன!” என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button