![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/261759765_2550782018390052_8426565457230195521_n-768x432-1.jpg?resize=708%2C398&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/264127337_2550782445056676_7206933663182434913_n-768x432-1.jpg?resize=708%2C398&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/266101929_2550782688389985_8912157561493969787_n-768x432-1.jpg?resize=708%2C398&ssl=1)
திருகோணமலைக் கல்வி வலயத்திற்கு உட்பட்ட தி/கலைமகள் மகாவித்தியாலயத்தில் திறன்வகுப்பறை திறந்துவைக்கப்பட்டது.
அன்புவெளி கிராமசேவகர் பிரிவுக்குட்ட பகுதியில் அமைந்திருக்கும் இப்பாடசாலைக்கு அன்புச் செல்வ ஊற்று அறக்கட்டளை அமைப்பின் ஒருங்கிணைப்
பாளர்களான திரு.விஸ்வலிங்கம் அருணகிரி (கனடா) திரு.குமாரசாமி பாஸ்கரன்(சுவிஸ்) ஆகியோரால் வழங்கப்பட்ட திறன் பலகை வகுப்பறைத் திறப்புவிழா 09.12.2021 அன்று நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திரு.நா.காளிராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொடையளிகள், கல்வி அதிகாரிகள், பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்
ஏ.ஜே.எம்.சாலி
திருகோணமலை
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/261759765_2550782018390052_8426565457230195521_n-768x432-2.jpg?resize=708%2C398&ssl=1)