![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/22-6268f844c525b.jpeg?resize=600%2C400&ssl=1)
மலேசிய தமிழ் இளைஞரான நாகேந்திரன் கே. தர்மலிங்கம் என்பவர் இன்று காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தலுக்காக 2021 இல் இவருக்கு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டிருந்த போதும் கொவிட் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டது. தண்டனைக்கு முன்னர் அவருக்கு விருப்பமான ஆடை அணிந்து புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவரது தாயாரின் தூக்கு தண்டனையை இரத்து செய்யுமாறு கோரப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டது.
மலேசியப் பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப், உம் இவரது தண்டனையை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.