உலகம்செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு -மூவர் பலி!!

shooting

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள குல்ஃபோர்ட் நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு விருந்துபசார நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பலர் கலந்து கொண்ட நிலையில், புத்தாண்டு பிறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திடீரென இனந்தெரியாத சிலர் அங்கிருந்தவர்களை நோக்கித் துப்பாக்கியால் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் 4 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.

துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தைப் புலனாய்வு பிரிவினர் ஆய்வு செய்தனர். எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மூன்று பேரின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. பலத்த காயமடைந்தவர்களில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏனைய மூன்று பேரும் விரைவில் குணமடைவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button