![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/05/23-646fa6326f0c8.jpeg?resize=600%2C400&ssl=1)
இன்று காலை பலபிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது ஆசிரியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும்
இவர், அம்பலாங்கொட கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அம்பலாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பிரதி அதிபராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.