இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

நாட்டின் நெருக்கடி நிலை காரணமாக மாணவர்கள் இடைவிலகும் நிலை அதிகரிப்பு!!

Schools

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இவ்வாறிருக்க , மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடைவிலகும் அபாயமும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

காகிதாதிகள் இறக்குமதிக்கான தட்டுப்பாடு, மற்றும் பாடசாலை உபகரண்களின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடைவிலகும் நிலை அதிகமாக ஏற்படும் என கூறப்படுகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை நாட்களில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் சூம் ஊடாக கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க அதிபர்கள் ஆசிரியர்களைப் பணித்துள்ள போதும் சகல மாணவர்களுக்கும் அது சாத்தியம் அற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அதிக அலைபேசிப்பாவனை மாணவர்களை தவறான வழியில் இட்டுச் செல்கிறது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button