இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மதுபானத்துடன் பொலிஸில் சிக்கிய பாடசாலை மாணவர்கள்!!

School students

பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 5 பேர் நேற்று பிற்பகல் பாணந்துறை கடற்கரையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 மற்றும் 15 வயதுடைய மாணவர்களே பாடசாலைச் சீருடையில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பாணந்துறை கடற்கரையில் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தவணைப் பரீட்சை முடிவடைந்ததையடுத்து, பாணந்துறை மதுபானக் கடையில் பியர் கொள்வனவு செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் பெற்றோரை வரவழைத்து அறிவுரைகள் வழங்கிய பின்னர் ஒப்படைக்கப்படுவார்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button