![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/10/22-633d33be6a133.jpeg?resize=600%2C400&ssl=1)
இன்று (05) புத்தல பல்வத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் 17 மாணவர்கள் உண்ட உணவில் விஷம் கலந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக குறித்த மாணவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் வழங்கப்பட்ட உணவிலேயே விசம் கலந்துள்ளதாகவும் மேற்படி மாணவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.