இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் பிணையில் விடுதலை!!

Released

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூத்த தொழிற்சங்கவாதியும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜோசப் ஸ்டாலினுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் கடந்த மே 28ம் திகதி நீதிமன்ற உத்தரவையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன.

இதில் சர்வதேச மனித மனித உரிமை அமைப்புக்கள் ஒன்றிணைந்து விடுத்த எதிர்ப்பும் அடங்கும்.

Related Articles

Leave a Reply

Back to top button