கவிதைமுத்தமிழ் அரங்கம்.

என் காத்திருப்பு-பிரபா அன்பு!!

poem

என் மௌனம் கலையும் நேரம்
இருள் சூழ்ந்து கொள்கிறது
நீ அருகில் இல்லாத போதும்
அசைந்தாடும் காற்றாடியாய்
காண்பவை யாவிலும் உன்னுருவமே காட்சிகளாக
எந்தன் தேடல்களில் வியாபித்துள்ளது நீதானே
கண்ணீரைத் துடைக்க நீயருகில்
இல்லையே என
பலதடவை அழுதிருக்கிறேன்
உனக்காக சிந்திய கண்ணீரின்
உப்பினால்
எனது உடல் துருப்பிடித்துக்கிடக்கிறது
இனம் புரியாதே தேடலும் நேசமும்
உன்னிடத்தில் மட்டுமே
முற்றுப்புள்ளியிடா வசனத்தைப்போல
தொக்கி நிற்கிறேனே
உன்னுடைய நினைவுகள் இல்லாத தருணங்களில்
என்னிடத்தில் நானே தோற்றுப்போகிறேன்
தூக்கம் தொலைத்த பொழுதுகளில்
எல்லாம்
உன்னை நினைத்து களைத்துப்போன
இதயம்
இயங்க மறுக்கிறது
மழைக்காக ஏங்கும் பூச்செடியைப்போல
தவித்திருக்கிறேன்
மனதின் அடிவேரில் பதிந்துவிட்டது உந்தன் நினைவுகள்
மோகனமே
உளிபட்டு வலியைத்தாங்கிய சிலையாகிக் கிடக்கிறது
உன்னை நினைத்த பேதையின் மனம்.

Related Articles

Leave a Reply

Back to top button