கவிதைமுத்தமிழ் அரங்கம்.

மீண்டும் பிறப்பெடுத்து… – பிரபா அன்பு.!!

poem

மனதோடு நிழலாடும்
கலையாத நினைவோடு
வலி தரும் கவியொன்றை
உரமாகப் படிக்க வேண்டும்
வேய்ங்குழலின் நாதமாக
தாய் மொழியை காதலித்ததால்
கழுமரம் ஏற்றப்பட்ட பாவியவள் நானென்பேன்
புனிதமான பூமியில்
மீண்டும் பிறப்பெடுத்து
குறுநிலம் ஒன்றின் குதிரைப்படைக்கு தளபதியாவேன்
அபிமன்யுவின் சக்கர வியூகங்கள்
பல தகர்த்து
குருதி சிந்தப்பட்டுக் கிடக்கும் தரிசு நிலத்தினை
பல்லாயிரம் ரோஜாக்கள் கொண்டு அலங்கரிப்பேன்
பாதாள சிறைகளில் வாழும் கைதிகளின் கரங்களை விடுவிப்பேன்
பலர் கண்ணீரை என் கரம் கொண்டு துடைப்பேன்
கவினுறும் தமிழோடு
தேன்மதுர கவியாலே என் மண்ணின் வீரம் உரைப்பேன்
ஒரு முனிவனைப்போல் தவமிருந்து
சாகாவரம் வேண்டி
என் மண் மொழி இனம் காத்திடுவேன்
என்னை கொன்றொழிக்க
காலனவன் குறுக்கே வந்தாலும்
தயங்காமல் கைது செய்து
சிறைச்சேதம் செய்திடுவேன்.

Related Articles

Leave a Reply

Back to top button