உலகம்செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் ஜோஷி ஏஞ்சல் உட்பட 9 பேர் பலி!

plane crash

இன்று டொமினிக்கன் குடியரசில் (16) நடைபெற்ற விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர் ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ்  (José Angel Hernandez)  அவரது மனைவி மற்றும் மகன் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

தனது இசையமைப்பு மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ். ‘ஃபொலோ லா மூவி’ என தனது ரசிகர்களால் அழைக்கப்படும் ஜோஷி உலகம் முழுவதும் பல இலட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.

சண்டோ டொமினிகோவில் உள்ள இசபெல்லா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜோஷி (38) அவரது மனைவி டிபி வொன் மெரி ஜிமென்ஸ் ஹர்சியா (31) மகன் ஜேடன் (4) மற்றும் நண்பர்கள் என மொத்தம் 9 பேர் கொண்ட குழுவினர் தனி சொகுசு விமானம் மூலம் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லெண்டோ நகருக்கு புறப்பட்டனர்.

புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானம் மீண்டும் இசபெல்லா விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

அவசர தரையிறக்கத்தின் போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இந்த கோர விபத்தில் இசையமைப்பாளர் ஜோஷி அவரது மனைவி மகன் உட்பட விமானத்தில் பயணித்த 9 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஜோஷி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button