உலகம்செய்திகள்

ஒமிக்ரொன் திரிபுடன் பாகிஸ்தானில் ஒருவர் அடையாளம்!!

omicron

பாகிஸ்தானில் ஒமிக்ரொன் கொவிட்-19 வைரஸ் திரிபுடன் முதற்தடவையாக ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தை சேர்ந்த ஒருவரே இந்த திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் ஒரு தடுப்பூசியேனும் பெற்றுக் கொள்ளாதவர் என பாகிஸ்தான் சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

உலகின் 63க்கும் அதிகமான நாடுகளில் ஒமிக்ரொன் கொவிட்-19 வைரஸ் திரிபு பரவியுள்ளது.

முதன்முறையாக தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட குறித்த வைரஸ் திரிபானது ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button