இலங்கைசெய்திகள்

சதுரங்க ஆர்வலர்களுக்கு ஒரு வாய்ப்பு!!

Northern chess primer league

யாழ். மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் Northern chess primer league (NCPL) எனும் 7 பேர் கொண்ட 6 குழுக்களுக்கிடையிலான போட்டி நடத்தப்படவுள்ளது.

மாவட்ட மட்டத்திலும், நாடளாவிய ரீதியிலும் நடாத்தப்படவுள்ள குறித்த போட்டியானது ஏப்ரல் 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.யாழ். மாவட்ட சதுரங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் IBC tamil, லங்காசிறி மற்றும் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் அனுசரணையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

யாழ். மாவட்ட சதுரங்க சம்மேளனம் பல போட்டிகளை இலங்கை சதுரங்க சம்மேளனத்துடனும் மற்றும் உலக தமிழர் சதுரங்க பேரவையுடனும் இணைந்து நடத்தி வருகிறது. சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த போட்டியில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கின்றனர் விழா ஏற்பாட்டாளர்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button