![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/1_5910608-17-720x375-1.jpg?resize=708%2C369&ssl=1)
உலக சுகாதார அமைப்பு, குரங்கு அம்மை நோய் பாதிப்பை, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை 58 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது எனவும் உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
கடுமையான வலி, பயம், கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய பாதிப்புகள் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகின்றன.
தற்போதைய சூழலில் சமூக பரவலாக நோய் தொற்றின் வேகம் விரிவடைவதால் இதுவரை காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு கூட தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ப்பு பிராணிகள் உட்பட வனவிலங்குகளுக்கு பரவும் ஆபத்தும் உள்ளது.