இலங்கைசெய்திகள்

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 108 உறவுகள் இதுவரை உயிரிழப்பு!!

missing persons relatives

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர் .
இவ்வாறு தமது உறவுகளை தேடியலைந்த 108 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் .

வவுனியா மாவட்டத்தில் 19 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .
வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வீதிகளிலிருந்து தமது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேசத்தின் தலையீடுகளை கோரியும் ஐக்கியநாடுகள் தமது விடயங்களில் தலையீடு செலுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியும் உறவுகள் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலைந்து சொல்லெண்ணா துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து வயோதிய ஓய்வு காலங்களில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் இருந்து வருகின்றார்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button