இலங்கைசெய்திகள்

காணாமல் போயிருந்த மீனவர்கள் கண்டுபிடிப்பு!!

missing

சிலாவத்துறை கடற்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்று 4 நாட்களாக காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்கள் நேற்று (27) கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

சிலாவத்துறை, காயக்குளி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 23 வயதுடைய மீனவர்கள் இருவர், கடந்த 23ஆம் திகதி மன்னார், முசலி கடற்பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இருவரும் மீண்டும் கரைக்குத் திரும்பாததால் அவர்களது உறவினர்கள் இது குறித்து சிலாவத்துறை காவல்துறையினருக்கு அறிவித்தனர். காவல்துறையினர் ஊடாக கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில்,
புத்தளம் கல்பிட்டி கடற்பகுதியில் மீன்பிடிப் படகொன்றில் மிதந்து கொண்டிருந்த இரு மீனவர்களையும் மீட்டனர்.

மீன்பிடிக்கச் சென்றபோது, இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அதனை இயக்க முடியாமல் இரண்டு நாட்களுக்கும் மேலாக கடலில் மிதந்தவர்களாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button