இலங்கைசெய்திகள்

கிளிநொச்சி இளைஞனைக் காணவில்லை!!

Missing

கிளிநொச்சி , கனகாம்பிகைக்குளம் பகுதியைச்சேர்ந்த இளைஞன் ஒருவரைக் காணவில்லை என பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

72 / A கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் அம்சவர்த்தன் (வயது 19) என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார்.

குறித்த இளைஞன் நேற்று முன்தினம் (16) காலை 7 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழில்பயிற்சி நிலையம் ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது தாயாரான உதயராஜ் றோஜா தெரிவித்துள்ளார்.

தனது கணவர் உதயராஜ் 26-12-2005 அன்று யாழ்.சாவகச்சேரி மீசாலையில் வைத்து அரச படைகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.எனவும் இன்று வரை அவர் தொடர்பில் எந்தத் தகவலும் தெரியாத நிலையில், எனது ஒரே ஒரு மகன் அம்சவர்தன் தற்போது காணாமல்போயுள்ளார் எனவும் அவரைக் கண்டுபிடித்து தருமாறும் குறித்த தாயார் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button