![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/மாணவி-மாயம்.jpg?resize=662%2C520&ssl=1)
யாழ்ப்பாணம் – வேலணை, சரவணைப் பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளார்.
தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து காணாமல் போன சிறுமியைத் தேடும் பணியினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.