இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!
Ministry of Education
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/01/23-63b91d41e5c09.jpg?resize=600%2C400&ssl=1)
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைகள் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் உயர்தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை ஆரம்பிக்கப்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்னர் பரீட்சை தொடர்பான உதவி வகுப்புகள், மாநாடுகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதை தடை செய்யுமாறு கல்வி அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.