இலங்கைசெய்திகள்

பிரதமர் பதவியில் இருந்து நான் ஓய்வுபெறமாட்டேன் – மஹிந்த!!

Mahinda

“பிரதமர் பதவியில் இருந்து நான் ஓய்வுபெறமாட்டேன். அதற்கான தேவைப்பாடு தற்போது எழவில்லை.”

  • இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச ஓய்வு பெறுவார் எனவும், புதிய பிரதமராக ராஜபக்ச குடும்பத்தில் உள்ள ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இது தொடர்பில் சிங்கள வார இதழொன்று பிரதமரிடம் வினவியுள்ளது.

அதற்குப் பதிலளித்துள்ள அவர், பிரதமர் பதவியில் தான் நீடிப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டில் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. அதனைப் பயன்படுத்தி சிலர் அரசுக்கு எதிராகக் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். எனினும், அறிவுள்ள மக்கள் இதனை நம்பமாட்டார்கள்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button