![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/625.500.560.350.160.300.053.800.900.160.90.jpg?resize=329%2C183&ssl=1)
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இணக்கம் தெரிவிப்பதாக மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தேரர்களின் கோரிக்கைக்கு பதிலளித்து ஜனாதிபதி அனுப்பிய கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.