இலங்கைசெய்திகள்

சிலிண்டருக்கு காத்திருந்த மக்களின் அதிரடியான செயற்பாடு!!

Kilinochchi

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்காக அதிகாலை முதல் காத்திருந்து ஏமாற்றம் அடைந்த கிளிநொச்சி மக்கள் ஏ-9 வீதியை மறித்துப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அவ்வேளை சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படாததை அடுத்து மக்கள் வெற்று எரிவாயு சிலிண்டர்களை ஏ-9 வீதியின் குறுக்காக வைத்து வீதியை மறித்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். 

நிலைமையறிந்து உடனடியாக அவ்விடத்திற்கு வந்த பொலிசார், சிலிண்டர் விநியோகஸ்தருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டதன் பின்னர் குறித்த போராட்டம் கைவிடப்பட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button