![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/Weather-850-1_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped-1.jpg?resize=708%2C383&ssl=1)
கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவின் கரணவாய் பகுதியில் நேற்று வீசிய கடும் காற்று காரணமாக 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரணவாய் பகுதியின் ஜே-348, ஜே-350 ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு 15 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு குறிப்பிட்டுள்ளது.