![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/22-62bbfe5677367.jpeg?resize=600%2C400&ssl=1)
கந்தகாடு முகாமிலிருந்து தப்பிச் சென்ற 232 கைதிகள் பொலிசாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ( 29) கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் இடம்பெற்ற மோதலில் போது வேலிகளை உடைத்துக்கொண்டு 500 பேர் தப்பிச் சென்ற நிலையில் இவர்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்ட போதே குழப்ப நிலை ஏற்பட்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.