இலங்கைசெய்திகள்

அக்கா கணவரை நம்பியதால் சுவிஸ் குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலைமை!!

Jaffna

யாழ்.வலிகாமம் பகுதியில் தனது சீதனக்காணியை விற்பதற்காக அக்கா கணவருக்கு அற்றொனி பவர் கொடுத்த சுவிஸ் வாழ் பெண்ணொருவரின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது.

காசியை விற்று காசை தனது கணவனின் பெயரில் வங்கியில் வைப்பிலிட்டுள்ள குறித்த பெண்ணின் சகோதரி , சுவிஸிலிருந்து, தங்கை, பணத்தைப் பெறுவதற்காக குடும்பத்துடன் ஊருக்கு வந்த போது தனது கணவர் மலேசியா சென்றுள்ளதாகவும் அவர் வந்த பின்னரே பணத்தை எடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கோபமடைந்த குறித்த பெண்ணின் கணவர் காசை வாங்கிய பிறகே வரவேண்டும் எனக் கூறிவிட்டு பிள்ளைகளுடன் சுவிஸ் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அக்காவின் கணவன் மலேசியா செல்லவில்லை எனவும் முல்லைத்தீவு, விசுவமடுவில் விற்பதாகவும் அறிந்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button