இலங்கைசெய்திகள்

யாழில் அப்துல் கலாம் அவர்களின் மணல் சிற்பம்!!

Jaffna

யாழ்ப்பாணம், காரைநகர் கசூரினா கடற்கரையில், இந்திய முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிலையில் வேலணையைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுப்பிரமணியம் சுகுமாரால், அப்துல் கலாமின் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், காரைநகர் பிரதேச சபை தவிசாளர் க.பாலச்சந்திரன், இந்திய துணை தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிற்பக் கலைஞரை ஊக்குவிக்கும் முகமாக ரொக்கப்பரிசும் இந்திய துணைத்தூதரால் வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button