இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாண மக்களுக்கு சீனா உதவிகளை வழங்கும் – சீனத் தூதுவர்!!

jaffna

யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களுக்கு வலைகள் மற்றும் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போது, சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்குமென இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக நல்லுறவு நிலவிவருகின்றது.

அதன் ஒரு அங்கமாகவே சீன தூதரகமானது யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது.

இன்று ஆரம்பமான இந்த நிகழ்வானது சீனா மற்றும் வடக்கு மக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும்.

குறிப்பாக சீன தூதரகமானது இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றது.

கடந்த இரண்டு வருடங்களாக உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது சீனா இலங்கைக்கு பெருமளவில் உதவிகளை வழங்கியுள்ளது

அதேபோல் வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கான தடுப்பூசியினை பெற்றுக்கொடுப்பதில் சீனா பெரும் பங்காற்றியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button