இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் எளிய முறையில் டீசல் தயாரிப்பு!!

Jaffna

தேங்காய் எண்ணெய்/வேப்பெண்ணெய், சாம்பல் போன்ற இலங்கையில் இலகுவாக கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்து பயோ டீசலினை இலகுவாகத் தயாரிக்க முடியும் என ஓய்வுபெற்ற ஆய்வு கூட உதவியாளரான நவாலியைச் சேர்ந்த செல்வராசா சுரேஸ்குமார் என்பவர் தெரிவித்துள்ளார்.

அதற்கான செய்முறை விளக்கத்தினை நேற்றைய தினம் (22-06-2022) நிகழ்த்திக் காட்டியுள்ளார். இதே போல நீர் மற்றும் சிரட்டைக்கரி போன்ற காபன் வகைகளைப் பயன்படுத்தி பயோ பெற்றோலினை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கான தயாரிப்பு மாதிரி செய்முறை விளக்கமும் அவரால் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

பயோ டீசலினை சாதாரணமாக வீட்டிலேயே செய்ய முடியும் எனவும், பயோ பெற்றோல் தயாரிப்பதற்கு சுமார் 50 மில்லியன் முதலீடு தேவைப்படும் எனவும் இதற்கு அனுசரணையாளர்களும் அரசின் ஒத்துழைப்பும் கிடைக்கும் பட்சத்தில் சூழலுக்குப் பாதிப்பில்லாத எரிபொருளை மிக குறைந்த விலையில் உற்பத்தி செய்து எரிபொருள் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button