இலங்கைசெய்திகள்

யாழ் – பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வந்த புதிய வசதி!!  

Jaffna

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கான புதிய வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி , 

சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இன்று (25) திறந்துவைத்தார்.

வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன்  வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக பயணிக்க கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய சுற்றுலா வழிகாட்டி கையேடுகளை தகவல் தொடர்பு நிலையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், விமான நிலைய அதிகாரிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button