இலங்கைசெய்திகள்

யாழில் இரு காவாலி குழுக்களுக்கு இடையே இடம் பெற்ற மோதல்!!

Jaffna

 மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவல்கட்டில் ஒரே பகுதியை சேர்ந்த இரு குழுவுக்கு இடையே இடம்பெற்ற தகராறில் மூவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இம் மூவரும் கத்தி வெட்டுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கிப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். பிராந்திய செய்தியாளர் போஸ்கோ

Related Articles

Leave a Reply

Back to top button