இலங்கைசெய்திகள்

யாழ். மத்திய கல்லூரி அதிபரின் மணிவிழா நிகழ்வு!!

Jaffna

கடந்த வாரம் ஓய்வு பெற்ற யாழ். மத்திய கல்லூரி அதிபர் கலாநிதி திரு.  எஸ் . கே. எழில் வேந்தன் அவர்களின் மணிவிழா நிகழ்வு இன்று காலையில் பாடசாலை மட்டத்தில் மிகப் பிரமாண்டமாக தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது. .

பாடசாலை முன்றலில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட திருமதி எழில்வேந்தன் தம்பதியினர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் ‘மத்தியின் எழில்’ என்னும் நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது. நிகழ்வில், யாழ். அரசாங்க அதிபர், பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், கல்வியல் கல்லூரி அதிபர் ஆகியோரின் வாழ்த்துரைகள் இடம்பெற்றன.

காலையில் ஆரம்பமாகி மதியம் வரை தொடர்ந்த நிகழ்வானது மதிய உணவுடன் நிறைவுக்கு வந்தது.

Related Articles

Leave a Reply

Back to top button