இலங்கைசெய்திகள்

யாழ் – நீர்வேலி கந்தசுவாமி கோயிலில் கௌரவிப்பு நிகழ்வு!!

Jaffna

யாழ்ப்பாணம் –  நீர்வேலி கந்தசுவாமி கோவிலில் கடந்த மூன்று வருடங்களுக்கும்  மேலாக வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவினை ஒழுங்கமைந்து வழங்கியமைக்காகவும் , அண்மையில் அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் ” சிவநெறிப் பிரகாசர் ” விருது பெருமையைப் பாராட்டியும்   சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இவரது சமூகப் பணியைப் பாராட்டி  24.02.2023 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு  ஆலயப் பிரதமகுருக்கள், ஆலயப் பரிபாலன சபையினர், முருகன் அடியவர்கள் ஆகியோரால் இக்கௌரவிப்பு நிகழ்வு நடாத்தப்படவுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button