இந்தியாசெய்திகள்

இந்திய காங்கிரஸ் கொடி கீழே விழுந்ததால் பரபரப்பு!

indian congress

இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டு 137 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் உள்ள அக்கட்சியின் அலுவலகங்களில் இன்று (28) சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் 137 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, கட்சி கொடியை ஏற்ற முற்பட்டார்.

கம்பத்தின் அரைவாசி வரை ஏறிய கொடி எதிர்பாராத விதமாக கீழே அவரது கைகளில் வந்து விழுந்தது.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டு, அந்த கொடியை எடுத்து சரி செய்து எடுத்துச் சென்றனர். பின்னர் நிகழ்ச்சிகள் தொடங்கின.

எனினும், கட்சி கொடி கீழே விழுந்ததால் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சிறிது பரபரப்பு நிலவியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button