![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/download-5.jpg?resize=275%2C183&ssl=1)
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
சட்டவிரோதமான முறைமைகளில் பணத்தைப் பெற்று விநியோகிக்கும் நபர்களது வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என அறிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள அவர் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தங்களது பணத்தை சட்டரீதியான முறைமைகளில் மட்டும் பரிமாறுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.