இலங்கைசெய்திகள்

கோட்டபாயவை கைது செய்யுமாறு கோரிக்கை முறைப்பாடு!!

Gottapaya

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்ஷவை போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கைது செய்யுமாறு கோரி தென்னாப்பிரிக்காவின் மனித உரிமைகள் சட்டத்தரணி யஷ்மின்சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்தின் சட்டத்தரணிகள் , சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்ற முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

இலங்கையில் 2009 ம் ஆண்டு இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்ஷ ஜெனீவா ஒப்பந்தங்களை கடுமையாக மீறினார் எனவும் இந்தக் குற்றங்கள் சிங்கப்பூரின் அதிகார வரம்புக்கு உட்பட்ட குற்றங்கள் எனவும் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதக்கொலை உட்பட்ட பல குற்றச்சாட்டுகள் கோட்டபாய ராஜபக்ஷ மீது கூறப்பட்டுள்ளது. Gottapaya

Related Articles

Leave a Reply

Back to top button