இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய இல்லத்தில் எரிவாயு கசிவு!!

gottapaya

நுகேகொட, மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்தில் சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.


இச்சம்பவம் கடந்த நவம்பர் 26ஆம் திகதி இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு ஏற்பட்ட எரிவாயு கசிவு குறித்து அந்நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து புதிய கேஸ் சிலிண்டர் ஒன்றை அனுப்பியதாக அவர் கூறினார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button