இலங்கைசெய்திகள்

நாடு அழிந்தாலும் தமிழருக்கு எதிரான அடக்குமுறையை அரசு நிறுத்தாது – கஜேந்திரன் எம். பி!!

Gajendran M. B

இலங்கை அழிவைச் சந்தித்தாலும் மக்கள் பட்டினியால் இறக்கும் நிலை வந்தாலும் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தப்போவதில்லை என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மூன்றுவேளை உணவுக்கு மக்கள் அல்லல்படுகின்றனர். நாடு பற்றி எரிகிறது ஆனால், வடக்கில் சிங்கள் பௌத்த மயமாக்கல் தொடர்ந்தவண்ணமே உள்ளது. குறிப்பாக முல்லைத்தீவில் கடற்படைக்கு காணி அளவிடப்பட்டது. இதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது கடற்படையால் அச்சுறுத்தப்பட்டதுடன் சுயாதீன ஊடகவியலாளர் குமணனும் கடற்படையால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். இதனை அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டும். அரசியல் கைதிகள் விடுதலைக்கு ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button